கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் நுவரெலியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போதே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 09 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி